Sunday, February 21, 2016

பொழிய தயாரா வான்?

வரண்ட பாலையாய்
வெடித்த நிலத்தில்
விழும் துளிகளை
நொடியில் விழுங்கி
இன்னும் இன்னும் என
பார்த்து நிற்கிறது நிலம்!
தூறல்களை
அவசரமாய் இழுத்து
தனக்குள் அமிழ்த்துகிறது!
ஆனாலும் மறையவில்லை
வெடிப்புகள்!
கொட்டும் மழையை
வாரி அணைத்து
சற்றே சிரிக்கிறது!
சிரிப்பை கண்டு
மழை நிற்க
எட்டிப் பார்க்கும்
கீற்று வெயிலும்
அனைத்தையும்
ஒன்றுமற்றதாக்க
மீண்டும் வெடிக்கிறது நிலம்!
வெடிப்பை மறைக்க
பெய்கிறது மழை!
மழையை காணவே
வெடிக்கிறது நிலம்!
நிற்காமல் பெய்யும் மழையும்
பிரவாகமாய் பொங்கும் வெள்ளமும்
தரக்கூடும்
நிரந்தரப் புன்னகையை!
பொழிய தயாரா வான்?

No comments:

Post a Comment