Friday, September 16, 2016

மிருகம்!

எதிர்பாராத நொடியில்
கொடும் மிருகமாய்
பாய்ந்து தாக்கி
அதிர்ச்சி அளித்து
கண்ணீரில் கரைத்து
ஆதங்கம்
வலி
இயலாமை
ஏமாற்றம்
கோபம்
எல்லாம் தந்து
சிந்திக்கவும் இடம் கொடாமல்
இறுக்கும்
சாவு ...
முதல் பசி
தீண்டும் நொடியில்
காற்றில் கரைந்து
காணாமலேயே போகிறது!