நம்பிக்கைக்கான
ஒற்றைப் புள்ளியையும்
தொலைத்த வெறுமை!
திசைகள் எங்கும்
ஓலம்
வலி
வேதனை!
பூக்களை பறித்தும்
விளக்குகளை அணைத்தும்
நெறிக்கும் காலம்!
பற்ற
ஒரு துரும்பும் இன்றியும்
தொடரும் பயணம் ..
துயரின்
கறை படிந்த
கரங்களைத் தேடி
இறுக்கிக் கோர்த்து
நகரும்
ஒவ்வொரு அடியும்
வெளிச்சத்தைத் தேடி ..
அணையும்
ஒவ்வொரு விளக்கிலும்
மேலும் கரங்கள் இணையும்
முன்னிலும் இறுக்கமாய்!
Sunday, January 17, 2010
துயரின் கறை படிந்த கரங்கள்
Subscribe to:
Posts (Atom)