Saturday, August 29, 2009

அமிலம்

கதறி அழத் தோன்றும்
ஒவ்வொரு முறையும்
அதை அடக்கி
மேல் எழுகிறது
ஆவேசம்!
இதயத்துள் அழுத்தி
புதைத்து வைக்கும்
ஒவ்வொருத் துளிக் கண்ணீரும்
அமிலமாய் இறுகி
தகிக்கின்றது!
அழுத்தம் தாங்காது
வெடித்துச் சிதறும் நாளில்
பிறக்கும் விடுதலை!