கதறி அழத் தோன்றும்
ஒவ்வொரு முறையும்
அதை அடக்கி
மேல் எழுகிறது
ஆவேசம்!
இதயத்துள் அழுத்தி
புதைத்து வைக்கும்
ஒவ்வொருத் துளிக் கண்ணீரும்
அமிலமாய் இறுகி
தகிக்கின்றது!
அழுத்தம் தாங்காது
வெடித்துச் சிதறும் நாளில்
பிறக்கும் விடுதலை!
Saturday, August 29, 2009
அமிலம்
Subscribe to:
Posts (Atom)