கதறி அழத் தோன்றும்
ஒவ்வொரு முறையும்
அதை அடக்கி
மேல் எழுகிறது
ஆவேசம்!
இதயத்துள் அழுத்தி
புதைத்து வைக்கும்
ஒவ்வொருத் துளிக் கண்ணீரும்
அமிலமாய் இறுகி
தகிக்கின்றது!
அழுத்தம் தாங்காது
வெடித்துச் சிதறும் நாளில்
பிறக்கும் விடுதலை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment