Friday, March 11, 2011

அன்பின் துளி!

அட்சயப் பாத்திரம்தான் நீ!
அனைவருக்கும்
அள்ளிதான் கொடுக்கிறாய்!
அதில் ஒரு துளி
எனக்கும் கிடைக்கதான் செய்கிறது!
போதத்தான் இல்லை!
துளி விழும் ஒவ்வொரு முறையும்
என் குவளையின் அளவு
இன்னும் பெரிதாகிறது!
நிரம்பி வழியும் உன் முன்
நிரப்பவே முடியாத குவளையோடும்
பேராசையோடும் பேரன்போடும்
இன்னும் இன்னும் என
பிச்சை பாத்திரமாக
கையேந்தியே நிற்கிறேன்!
பிச்சை எடுப்பது
கூசத்தான் செய்கிறது!
அதைதாண்டியும்
வெட்கமற்று துரத்துகிறேன்!
என் குவளை
நிரம்பப் போவதே இல்லை
என்று தெரிந்தும்
முட்டாளாய் முன் நிற்கிறேன்!
நன்றியற்றவளாய் இருந்த போதும்
தொடர்ந்தும்
எனக்கான துளிகளை
நீ
தந்து கொண்டுதான் இருக்கிறாய் ...
எல்லாம் புரிந்த புன்னகையோடு!