சுற்றிலும் எல்லாம்
உயிர்ப்புடன் இருக்கும் பொழுதே
ஏதோ ஒன்று செத்து விழுகிறது..
நொடியும் மாறவில்லை
மற்றவற்றின் இயக்கம்..
செத்து விழுந்தவற்றிற்காய் துடிப்பதா..
இயக்கத்தைத் தொடர்வதா
என ஊசலாடும் ஒரு சில..
இயங்கிய போதும்
உள்ளுக்குள் செத்து போனவை
இன்னும் சில..
இயங்காவிட்டால் செத்து விடுவோம்
என்ற அச்சத்தில் பல..
ஒவ்வொரு நொடியும் சாவை
சலனமின்றி கடந்து
உயிர்ப்புடன் இயங்குது உலகம்!
கடக்க முடியாது
தேங்கி நிற்கிறது மனம்!
Tuesday, March 19, 2013
உயிர்ப்பூ
Subscribe to:
Posts (Atom)