Sunday, October 19, 2014

கருப்புப் பூனை

இருட்டில் உலவும்
கருப்புப் பூனை நான்!
எவர் கண்ணுக்கும்
தெரியாது நிற்கிறேன்..
எனினும்
என் கண்ணுக்கு
எதுவும் தப்பவில்லை!
ஒதுங்கி நின்று
வேடிக்கைப் பார்க்கிறேன்!
கண்ணுக்குத் தெரியாததாலேயே
கருத்திலும் படாது
என உரைத்த பொய்கள்...
ஒளி வெள்ளம் பாய்ச்சி
கண்களை குருடாக்கி
மறைத்த உண்மைகள்...
இருட்டில் மின்னுகின்றன!
என் இருப்பை உணராது
ஆட்டம் போடும்
அவற்றின்
ஆபாசம் கூச செய்கிறது!
பொய்கள் உண்மைகளாயும்
உண்மைகள் பொய்களாயும்
வாழ்ந்த காலம்
நிம்மதியாகதான் இருந்தது!