Thursday, July 30, 2009

துயரத்தின் கங்கு ...

திடுக்கிட்டு விழிக்கும்
ஒவ்வொரு இரவிலும்
கண்முன்
கோர உருவம் எடுத்து நிற்கிறது
சாவு!
துகள் துகளாய்
நொறுங்கி போன
கனவின் துண்டுகள்
குத்திக் கிழித்து
இரத்தத்தால் எழுதிய
உண்மையின்
கனம் தாளாது
ஒடுங்கும் மனது!
இழப்பின் வலியை
கண்ணீராய்
கரைய விடாத பிடிவாதம்!
துயரத்தின் கங்கு
கனன்று கனன்று
உருப்பெறும்..
தீப்பிழம்பாய்..!