விதை விழும் போது சிலிர்த்து
நாற்றாய் பெருத்து
பெருமிதம் விளைந்து
பூரிப்பில் மணியாய் குலுங்கி
அறுபட்டு
அனைத்தும் தொலைத்து
காய்ந்து
மழை வாங்கி
ஈரம் பூத்து
மீண்டும்
விதை வாங்க தயாராய்
புதுசாய் சிரித்து நிற்குது மனசு!
Tuesday, January 1, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment